புதன், 22 டிசம்பர், 2010
திங்கள், 25 அக்டோபர், 2010
நேசம் கிருஷ்ணன்... உன்னத மனிதருக்கு உலக அங்கீகாரம்!

சமூக அக்கறை, நம்பிக்கை, விடா முயற்சி இவற்றை மட்டுமே மூலாதாரமாகக் கொண்டு இந்தப் பூமியில் மாற்றத்தைக் கொண்டு வர முனைந்து செயல்படுவோரைக் கண்டறிந்து, ஆண்டுதோறும் சிறந்த மனிதர்களை உலகுக்கு அடையாளம் காட்டி வரும் திட்டமே 'சி.என்.என். ஹீரோஸஸ்'.
இதில், 2010 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த 10 மனிதர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியர், தமிழரான கிருஷ்ணன். (இவர், முதலிடம் பெறுவது உங்கள் கையில் - விவரம் கீழே)
தனி மனிதர் ஒருவருக்கு உணவில்லாதபோது, அவரது வயிற்றுச் சோறிட்டு வருபவர் இவர்.
கிருஷ்ணனை 2005 ஆம் ஆண்டே வாசகர்களுக்கு அடையாளம் காட்டியது விகடன். அவரது சமூகப் பணியின் ஆரம்பகட்ட நிலை குறித்து ஜூலை 31, 2005 தேதியிட்ட ஜூனியர் விகடனில் வெளிவந்த செய்திக் கட்டுரை இதோ ஒரு ஃப்ளாஷ்பேக்காக...
****
நம்பிக்கை மனிதர்கள்... 'நேசம்'கிருஷ்ணன்!

"அப்பாவும், அம்மாவும் வேலைக்கு போனப்புறம் சும்மாதானே இருக்கோம்... ஊரை ஒரு ரவுண்ட் அடிப்போம்னு சைக்கிளை எடுத்துக்கிட்டு மதுரை ரயில்வே ஸ்டேஷன் பக்கமா போனேன். மேம்பாலத்தை ஒட்டி ரோட்டோரமா அழுக்குத் துணிபோல கிடந்தார் ஒரு பெரியவர். நெருங்கிப் பார்த்தேன்... மனநிலை சரியில்லாத நபரான அந்தப் பெரியவர், தன்னோட நரகலை தன் கையில எடுத்து சாப்பிட்டுக்கிட்டிருந்தார். எனக்குள்ளே ஷாக் அடிச்ச மாதிரியிருந்தது. உடனே அவரோட கையப் புடிச்சு உதறி விட்டேன். அவரைச் சுத்தப்படுத்தி உட்கார வெச்சுட்டு, ஓட்டல்ல இருந்து இட்லிய வாங்கிவந்து குடுத்தேன். அவரோட கண்கள்ல நீர்கட்டி நின்னுச்சு.
அதே நினைப்போட வீட்டுக்குத் திரும்பி வந்த நான், இந்த மனித வாழ்க்கையில இப்படியெல்லாம் கஷ்டங்கள் இருக்கறத நினைச்சு நினைச்சு 'ஓ'னு அழுதேன். அதுக்கப்புறம் எனக்கு சுவிட்சர்லாந்து பெருசா தெரியல. 'ஸ்டார் ஓட்டல்ல ஐந்நூறு ரூபாய்க்கு ஃப்ரைடு ரைஸ் வாங்கி, அதுல முக்கால் பிளேட்ட சாப்பிடாம மிச்சம் வெச்சுட்டுப் போறவங்களுக்கு சர்வீஸ் பண்றத விட, தெருவோரத்துல தூக்கி வீசப்பட்டவங்களுக்கு சேவை பண்றதே சரி'னு என் மனசுக்கு பட்டுது. ஊர்லயே தங்கிட்டேன்" என்று படு இயல்பாகச் சொல்லி நம்மை நெகிழவைக்கிறார் கிருஷ்ணன்.
இன்றைக்கு மதுரை தெருக்களில் வேண்டாத பொருளாக எறியப்பட்டுக் கிடக்கும் நூற்று இருபது பேருக்கு மூன்று வேளையும் வயிறார சாப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறார் கிருஷ்ணன். மனநோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள், உழைத்து சாப்பிடமுடியாத முதியவர்கள் என்று பாவப்பட்ட ஜீவன்கள்தான் அவர்கள் அனைவரும்.
"எந்த நேரமும் நான் இதே சிந்தனையா திரியுறத பாத்துட்டு எங்க சொந்தக்காரங்க, 'இவன முனி அடிச்சுருக்கு'னு கிளப்பி விட்டுட்டாங்க. அதக்கேட்டுட்டு எங்க அம்மாவும் அப்பாவும் சோட்டாணிக்கரைக்கு என்னைய இழுத்தாங்க. 'அதுக்கு முன்னாடி நான் சாப்பாடு போடுற அந்த ஜீவன்களை ஒரு தடவ நீங்க நேருல வந்து பாக்கணும்'னு அம்மாகிட்ட சொன் னேன். எங்கூட வந்து அந்த ஜீவன்கள பாத்துட்டு வீட்டுக்கு வந்ததுமே, 'இத பாருப்பா, நீ அந்த ஜீவன்களுக்கு சோறு போடு. ஒன்னைய புள்ளயா பெத்து பாக்யம் பண்ணினதுக்காக உனக்கு நாங்க சோறு போடுறோம்'னு ரெண்டு பேருமே கண்கலங்கிப்போய் சொன்னாங்க. அதிலிருந்துதான் நான் முழு நேர வேலையா இதை செய்ய ஆரம்பிச்சேன்" என்று சொல்லி தன் பெற்றோரின் மீதான மரியாதையையும் அதிகப்படுத்தினார் கிருஷ்ணன்.

இன்று இந்த நூற்று இருபது பேருக்கும் ஒரு நாளைக் கான உணவை சமைத்து சப்ளை பண்ணி முடிக்க, மூவாயிரம் ரூபாய் செலவு பிடிக்குமாம். இவருடைய தொண்டுள்ளத்தை கண்டு நெகிழ்ந்துபோன சேவை உள்ளம் கொண்ட இருபது பேர், மாதாமாதம் தலா மூவாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு நாளைக்கு உண்டான செலவை ஏற்றுக்கொண்டு வருகிறார் களாம். கிருஷ்ணனின் பெற்றோர் இருவரும் மேற்கொண்டு இரண்டு நாட்களுக்கான செலவை பகிர்ந்துகொள்ள, மீதி எட்டு நாட்களுக்குத்தான் சிரமம். திருமணம், பிறந்தநாள் என்று ஏதாவது நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள், கொடுக்கும் உணவை வைத்து அதைச் சமாளித்து வருகிறார் கிருஷ்ணன்.
சாப்பாடு சப்ளை போக மீதி நேரங்களில் அழுக்காக திரியும் மனநோயாளிகளை மாநகராட்சி குளியலறைக்குள் கூட்டிபோய் குளிக்கவைத்து அவர்களுக்கு மாற்றுத் துணி கொடுத்து பளீச் ஆக்கிவிடுகிறார். முடிவளர்த்துக் கொண்டு திரியும் மனநோயாளிகளை உட்கார வைத்து, கத்தரி பிடித்து அவர்களுக்கு முடி வெட்டிவிட்டு அழகு பார்க்கிறார், வேதங்களை முறைப்படி கற்ற 24 வயது, கிருஷ்ணன்!
- குள.சண்முகசுந்தரம் படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
***
ஆரம்ப காலகட்டத்தில் நாளொன்றுக்கு நூற்று இருபது பேரின் பசிப் பணியைப் போக்கி வந்த கிருஷ்ணன், கடந்த எட்டு ஆண்டுகளாக தனது அக்ஷயா அறக்கட்டளை மூலம் தினமும் ஏறத்தாழ 400 பேருக்கு மூன்று வேளை உணவு அளித்து வருகிறார்.
அன்றாடம் காலை 4 மணிக்கே துவங்கிவிடும் இவரது சேவைப் பயணம், சுமார் 200 கி.மீ தூரம் வரை மதுரையை வலம் வந்து, வீடற்ற ஏழை மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்குவது வழக்கம்.
கிருஷ்ணனின் அடுத்த இலக்கு... வீதியில் வசிப்போருக்கு வசிக்க வீடு கட்டித் தருவதே. அதற்கான, செயல் திட்டங்களை வகுத்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
உங்கள் ஓட்டு கிருஷ்ணனுக்கே...
உலகின் சிறந்த 10 மனிதர்களைத் தெரிவு செய்துள்ள சி.என்.என்., அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து 'சி.என்.என். ஹீரோ ஆஃப் தி இயர்' என்ற கெளரவத்தை அளிக்க இணையத்தில் வாக்கெடுப்பு நடத்தி வருகிறது.
சி.என்.என். தெரிவுப் பட்டியலில் இடம்பெற்றதால் இப்போது 25,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைத்திருக்கிறது. இந்த ஆன்லைன் வாக்கெடுப்பில் முதலிடம் பெற்றால், கிருஷ்ணனுக்கு 1,00,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைக்கும். அது, அவரது கனவுத் திட்டத்துக்கு உறுதுணை புரியலாம்.
"என்னுடைய மக்களைக் காப்பற்ற வேண்டும். இதுவே, எனது வாழ்க்கையின் நோக்கம்."
- இந்த உன்னத மந்திரச் சொல்லை தனது ஒரே கொள்கையாக கொண்டுள்ள மதுரை நேசம் கிருஷ்ணன், உலகின் முதன்மை நாயகனாக தேர்ந்தேடுப்பதற்கு, உங்கள் ஓட்டுகளை பதிவு செய்ய...http://heroes.cnn.com/vote.aspx
நவம்பர் 18 ஆம் தேதி வரை இந்த வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
கிருஷ்ணன் பற்றிய முழு விவரங்களைத் தரும் சி.என்.என். பக்கம்... THIS IS YEAR HERO NARAYANAN KRISHNAN (PROTECTING THE POWERLESS)
கிருஷ்ணனின் அக்ஷயா அறக்கட்டளையின் வலைத்தளம்... http://www.akshayatrust.org/
இந்திய இணையவாசிகள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தாலே கிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதி! thanks vikadan
சனி, 21 ஆகஸ்ட், 2010
சனி, 7 ஆகஸ்ட், 2010
MADRASAPATTINAM

Bank Of Madras-1935

Chennai Ambulances-1940

Chennai Car Show Room-1913

Chennai Central Railway Station-1920

Chennai Central Railway Station-1925

Chennai Central Train Station

Chennai CENTRAL-RAILWAY Statio

Chennai Chepauk Cricket-1891

Chennai City Map-1909

Chennai Egmore Railway Station

Chennai Egmore Station-1920

Chennai Egmore Waiting room-1920

Chennai Esplanade-1920

Chennai ESPLANADE

Chennai First Line Beach-1915

Chennai Ford Show Room-1917

Chennai Fort ST George 1700s

Chennai HARBOUR-1891

Chennai Library-1913

Chennai Marina beach

Chennai Marina beach-1890

Chennai Market (Kothaval Chawadi)- 1939

Chennai Moubray Road-1885

Chennai MUNROE STATUE

Chennai Mylapore-1906

Chennai Mylapore-1939

Chennai Napier Bridge-1895

Chennai Old Esplanade

Chennai Old High Court

Chennai Old Mosque

Chennai Old Mount Road Anna salai-1905

Chennai Old Mount Road Anna salai

Chennai PARADE-GROUND

Chennai Parrys Corner-1890

Chennai PRESIDENCY-COLLEGE

Chennai Pycrofts Road-1890

Chennai RIPPON-BUILDING

Chennai SPENCERS

FIRST EVER CHENNAI MASTER PLAN

Madras high courts_1895

Madras view from the harbor 1895

Old Chennai SENATE-HOUSE

Situationsplan_von_Madras_1888

SR Headquarters-1922

St. Mary's Church Madras
புதன், 7 ஜூலை, 2010
petrol
ண்டும் ஒருமுறை பெட்ரோல் விலையை உயர்த்தி இருக்கிறது மத்திய அரசு. கொஞ்சநஞ்சமல்ல, ஒரு லிட்டருக்கு 3.73 ரூபாய்! பெட்ரோலுக்கு மிக அதிகமான மானியம் கொடுப்பதால் அரசாங்கத்துக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்கவே இந்த விலையேற்றம் என்கிறது அரசு.
அரசின் இந்த வாதத்தைக் கேட்கும் சாதாரண மக்கள்கூட, பெட்ரோல் விலையை உயர்த்துவதில் நியாயம் இருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால், பெட் ரோல் மானியம் பற்றி அரசு உண்மையைச் சொல் கிறதா? என்னைப் பொறுத்த வரை, மானியம் தொடர்பாக மத்திய அரசு முன்னுக்குப் பின் முரணாகப் பேசி, மக்களைக் குழப்பி, நாடகமாடுகிறது என்றுதான் சொல்வேன். மானியம் பற்றி அரசு சொல்லும் பொய்களுக்கு என் பதில் இதோ:
1. பெட்ரோல் மானியம் - உண்மையில் நஷ்டமா?
எல்லாப் பொருட்களுக்கும் உற்பத்தி விலை என ஒன்று உண்டு. உதாரணமாக, ஒரு சட்டை தைக்கிறோம். இதன் உற்பத்திச் செலவு 50 ரூபாய். இதனை 100 ரூபாய்க்கு விற்றால் 50 ரூபாய் லாபம். அதுவே 100 ரூபாய்க்குப் பதிலாக 80 ரூபாய்க்கு விற்றால் 30 ரூபாய் லாபம். அதாவது, லாபத்தில் 20% தள்ளுபடி கொடுத்து விற்கிறோம். இந்த 20% நமக்கு நஷ்டம்தான் என்றாலும், அது லாபத்தில்தான் நஷ்டமே ஒழிய, உண்மையான நஷ்டமல்ல.
இனி பெட்ரோலுக்கு வருவோம். ஒரு லிட்டர் பெட்ரோலைத் தயாரிக்க 20 ரூபாய் ஆகிறது. அதற்கு மேல் அரசு பல வரிகளைப் போட்டு 49 ரூபாய் ஆக்கிவிடுகிறது என்றால் லாபம் 29 ரூபாய். அரசு அதன்பிறகு 4 ரூபாய் மானியமாகக் கொடுத்தால், அதை லாபத்திலிருந்து நஷ்டம் என்றுதான் பார்க்க வேண்டுமே ஒழிய, உண்மையான நஷ்டமல்ல!
எனவே, மானியம் கொடுப்பதால் அளவுக்கதிகமான நஷ்டம் ஏற்படுவதாகச் சொல்வதில் கொஞ்சமும் உண்மை இல்லை. அப்படி நஷ்டம் ஏற்பட்டிருந்தால் பெட்ரோல் தயாரிப்பு நிறுவனங்கள் நஷ்டம் அடைந்திருக்க வேண்டும். ஆனால் கச்சா எண்ணெய் விலை உச்சத்தில் இருந்த 2007-08-ம் ஆண்டில்கூட பெட்ரோல் தயாரிப்பு நிறுவனங்கள் 9,557 கோடி ரூபாய் வரி செலுத்தியது.
இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களிலேயே மிக அதிகமான வரி கட்டிய துறை என்கிற பெயரைத் தக்க வைத்துக் கொண்டன பெட்ரோல் தயாரிப்பு நிறுவனங்கள். ஆக, பெட்ரோலுக்கு அளிக்கப்படும் மானியத்தால் பெட்ரோல் நிறுவனங்களுக்கும் சரி, அரசுக்கும் சரி, நஷ்டமில்லை!
2. மானியத்தால் அரசுக்குப் பாதிப்பா?
பெட்ரோலுக்கு அளிக்கும் மானியத்தை மிகப் பெரிய விஷயமாக பலரும் பேசுகிறார்கள். அரசு அளிக்கும் மொத்த மானியத்தில் 4% பணம் மட்டுமே பெட்ரோலுக்காகப் போகிறது. 87% பணம் உணவு மற்றும் உரங்களுக்காகச் செலவு செய்யப்படுகிறது. பெட்ரோலுக்கான மானியம் நமது ஜி.டி.பி.யில் 1% கூட இல்லை. பெட்ரோல் உள்பட நமது மொத்த மானியமே நமது ஜி.டி.பி-யில் 2% மட்டுமே. வளர்ந்த நாடுகள் மானியத்துக்காக 4% பணத்தைச் செலவு செய்யும்போது அதில் பாதியைக்கூட செலவு செய்யாத நாம், ஏன் இவ்வளவு பெரிதாகப் பேசுகிறோம் என்பது புரியவில்லை.

அரசு மானியமாகச் செலவழிக்கும் பணம் தேவையான மக்களுக்குப் போய்ச் சேருவதில்லை. இதற்காக மானியத்தை ஒழிப்பதே சரி என்கின்றனர் சிலர். இதற்குக் காரணம் அரசுதான். உதாரணமாக, உரங்களுக்கு அரசாங்கம் மானியம் தருகிறது. இந்த மானியம் ஏழை, பணக்கார விவசாயி என பாகுபாடு இல்லாமல் எல்லோருக்கும் கொடுக்கப்படுகிறது. இதனால் ஏழை விவசாயிகளைவிட பணக்கார விவசாயிகள் அதிகம் பயனடைகிறார்கள். ஏழை விவசாயிகள் யார் என்பதைக் கண்டுபிடித்து, அவர்களுக்கு மட்டுமே மானியத்தின் பயனை அடையச் செய்வது அரசின் வேலை. தேவை இல்லாதவர்களுக்கு மானியத்தின் நன்மை போய்ச் சேருவதை அரசாங்கம்தான் தடுக்க வேண்டும். அதைச் செய்வதை விட்டுவிட்டு மானியத்தையே ஒழிப்பது சரியல்ல.
4. பணவீக்கத்தை அதிகரிக்கும் பெட்ரோல் விலை!
பெட்ரோல், டீசல் விலையை ஏற்றினால் ஏறக் குறைய எல்லாப் பொருட்களின் விலையும் ஏறும். பெட்ரோலிய பொருட்களின் விலையை 4-5% உயர்த்தினால் வீட்டுச்செலவு 23% வரை உயரும் என ஒரு சர்வே சொல்கிறது. ஏற்கெனவே நம் அன்றாடத் தேவைக்குப் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களின் விலையும் அதிகமாக இருக்கிறது. ஜூன் 2008-ல், பெட்ரோல் விலை உயர்வு அறிவிப்பு வந்தவுடன் பணவீக்கம் 11.05% க்கு எகிறியது. கடந்த 13 ஆண்டுகளில் பணவீக்கம் இவ்வளவு உச்சத்தை அடைந்ததில்லை. மேலும் அரசாங்க பொருளாதார நிபுணர்களால் இந்த விலை உயர்வு 0.5/0.6 சதவிகிதம் தான் பணவீக்கத்தை உயர்த்தும் என்பது பொய்யாகி ஒரே வாரத்தில் 2.31% உயர்ந்தது. மானியத்தைக் குறைக்க வேண்டும் என்கிற தலைவலியைப் போக்க அரசு எடுக்கும் நடவடிக்கை, பணவீக்கம் என்கிற திருகுவலியைத்தான் கொண்டு வருகிறது. அரசாங் கத்தின் செலவு குறைவதற்காக மக்கள் அதிகம் செலவழிக்க வேண்டும் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?
5. பெட்ரோல் மீது வரிக்கு மேல் வரி!
பெட்ரோல் மீது இவ்வளவுதான் வரி விதிக்க வேண்டும் என்பதற்கு ஒரு வரம்பில்லாமல் போய் விட்டது! மத்திய அரசு மட்டுமல்ல, மாநில அரசும் பெட்ரோல் பொருட்கள் மீது வரி விதிக்கிறது. நம் நாட்டில் மட்டும்தான் பெட்ரோல் பொருட்கள் மீது 52 % வரி விதிக்கப்படுகிறது. ஆசிய நாடுகளில் இந்த அளவுக்கு வேறு எந்த நாட்டிலும் பெட்ரோல் மீது வரி விதிக்கப்படவில்லை. நம் நாட்டில் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் பயன்பாடுதான் 85 சதவிகிதத்துக்கும் மேலாக உள்ளது. அப்படி இருக்கையில் இந்த உச்ச வரி தேவைதானா? ஒரு நாட்டு மக்கள் நிறைய மது அருந்தினால், அதன் மீது அதிக வரி விதிப்பது நியாயம். ஆனால் பெட்ரோல் என்பது மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஆதாரம்.
அதன் மீது அதிகமாக வரி விதித்தால், பொருளா தாரம்தான் வீழ்ச்சி அடையும்.
6. மானியத்தை ஒழித்தால் பிரச்னை தீருமா?
நம் அரசின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணம் மானியம்தான் என்கிற மாதிரி பேசுகிறார்கள். மின்சாரம், தொலைபேசி, வீட்டுவசதி உள்பட பல்வேறு துறைகளில் மாநில அரசாங்கங்களால் ஆண்டு ஒன்றுக்கு ஏற்படும் இழப்பு மட்டுமே 27 ஆயிரம் கோடி ரூபாய்! இத்துடன் மத்திய அரசாங்கத்தின் இழப்பையும் சேர்த்தால், நாம் மானியமாகச் செலவழிக்கும் தொகையையும் தாண்டி நிற்கும். இந்தப் பணத்தை வசூலிக்க நாம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஆனால் பெட்ரோலுக்கு அளிக்கும் மானியத்தை மட்டுமே பெரிய விஷயமாகப் பேசுகிறோம்.
ஆக, மானியத்தை நீக்குவதை விட்டுவிட்டு, மத்திய அரசு தனது வருவாயை எப்படிப் பெருக்குவது என ஆக்கப்பூர்வமாக யோசித்து நடவடிக்கை எடுப்பது தான் நல்லது.
வெள்ளி, 23 ஏப்ரல், 2010
BEST TECH SITES
http://cybersimman.wordpress.com
Alexa Rank 142,837
2. சூர்யா ௧ண்ணன்
http://suryakannan.blogspot.com
Alexa Rank 181,113
3. புதுவை
http://www.pudhuvai.com
Alexa Rank 184,403
4. வேலன்
http://velang.blogspot.com
Alexa Rank 226,536
5. வின்மணி
http://winmani.wordpress.com
Alexa Rank 240,070
6. PKP.in
http://pkp.blogspot.com
Alexa Rank 286,480
7. உபுண்டு
http://ubuntuintamil.blogspot.com
Alexa Rank 353,185
8. தமிழ்நுட்பம்
http://tvs50.blogspot.com
Alexa Rank 377,887
9. கிருஷ்ணா (Krishna)
http://rvkrishnakumar.blogspot.com
Alexa Rank 380,515
10. வன்னி தகவல் தொழில்நுட்பம்
http://vannitec.blogspot.com
Alexa Rank 461,486
11. Browse All
http://browseall.blogspot.com
Alexa Rank 463,206
12. அதே கண்கள்
http://athekangal.blogspot.com
Alexa Rank 621,798
13. தகவல் தொழில்நுட்பம்
http://mytamilpeople.blogspot.com
Alexa Rank 675,126
14. கணினி மென்பொருட்களின் கூடம் **
http://www.gouthaminfotech.com
Alexa Rank 683,413
15. சுடுதண்ணி
http://suduthanni.blogspot.com
Alexa Rank 898,175
16. பொன்மலர் பக்கம்
http://ponmalars.bloogspot.com
Alexa Rank 1,285,469
17. தொழில்நுட்ப செய்திகள்-தமிழில்
http://techbyvarma.blogspot.com
Alexa Rank 1,296,701
18. Ivan's Blog
http://ipadiku.blogspot.com
Alexa Rank 1,395,373
19. TamilTech.info
http://www.tamiltech.info
Alexa Rank 1,620,103
20. பிலாக்கர் டிப்ஸ்
http://bloggertipsintamil.blogspot.com
Alexa Rank 1,673,687
21. கிராமத்து பையன்
http://gramathan.blogspot.com
Alexa Rank 1,755,112
22. தமிழ் வெஃப்
http://mytamilweb.blogspot.com
Alexa Rank 1,862,811
23. GNU-கட்டற்ற மென்பொருள் - லினக்ஸ் - தமிழன் வெல்வான்
http://gnutamil.blogspot.com
Alexa Rank 2,169,144
24. Tamilhackx
http://www.tamilhackx.com
Alexa Rank 2,797,040
25. தமிழ் நுட்ப மலர்
http://tamiltechmalar.blogspot.com
Alexa Rank 2,937,210
26. Learn Computer in Tamil - ACS Center - Kahatowita
http://acsstudy.blogspot.com
Alexa Rank 3,074,438
27. உலவு (ulavu blog)
http://ulavublog.blogspot.com
Alexa Rank 3,118,596
28. கற்றது Excel
http://sans-excel.blogspot.com
Alexa Rank 3,395,522
29. நித்தி கிளிக்ஸ்...
http://nithiclicks.blogspot.com
Alexa Rank 3,569,774
30. அனூப்புடன் ஒரு ஐடி வலம்
http://itvalam.blogspot.com
Alexa Rank 4,189,365
31. தமிழ் வலைப்பதிவர் உதவிப்பக்கம்
http://tamilblogging.blogspot.com
Alexa Rank 5,578,967
32. தமிழ் & Cross-Platform Unicode
http://tamilcpu.blogspot.com
Alexa Rank 7,259,640
33. Vijidon
http://vijidon.wordpress.com
Alexa Rank 9,421,039
34. சின்ன பையன்
http://cp-in.blogspot.com
Alexa Rank 11,709,339
35. தமிழில் நுட்பம்
http://tamilit.wordpress.com
Alexa Rank 13,870,809
36. Tamil Blogging Tips
http://tamilbloggingtips.blogspot.com
Alexa Rank 14,319,860
Alexa Rank 142,837
2. சூர்யா ௧ண்ணன்
http://suryakannan.blogspot.com
Alexa Rank 181,113
3. புதுவை
http://www.pudhuvai.com
Alexa Rank 184,403
4. வேலன்
http://velang.blogspot.com
Alexa Rank 226,536
5. வின்மணி
http://winmani.wordpress.com
Alexa Rank 240,070
6. PKP.in
http://pkp.blogspot.com
Alexa Rank 286,480
7. உபுண்டு
http://ubuntuintamil.blogspot.com
Alexa Rank 353,185
8. தமிழ்நுட்பம்
http://tvs50.blogspot.com
Alexa Rank 377,887
9. கிருஷ்ணா (Krishna)
http://rvkrishnakumar.blogspot.com
Alexa Rank 380,515
10. வன்னி தகவல் தொழில்நுட்பம்
http://vannitec.blogspot.com
Alexa Rank 461,486
11. Browse All
http://browseall.blogspot.com
Alexa Rank 463,206
12. அதே கண்கள்
http://athekangal.blogspot.com
Alexa Rank 621,798
13. தகவல் தொழில்நுட்பம்
http://mytamilpeople.blogspot.com
Alexa Rank 675,126
14. கணினி மென்பொருட்களின் கூடம் **
http://www.gouthaminfotech.com
Alexa Rank 683,413
15. சுடுதண்ணி
http://suduthanni.blogspot.com
Alexa Rank 898,175
16. பொன்மலர் பக்கம்
http://ponmalars.bloogspot.com
Alexa Rank 1,285,469
17. தொழில்நுட்ப செய்திகள்-தமிழில்
http://techbyvarma.blogspot.com
Alexa Rank 1,296,701
18. Ivan's Blog
http://ipadiku.blogspot.com
Alexa Rank 1,395,373
19. TamilTech.info
http://www.tamiltech.info
Alexa Rank 1,620,103
20. பிலாக்கர் டிப்ஸ்
http://bloggertipsintamil.blogspot.com
Alexa Rank 1,673,687
21. கிராமத்து பையன்
http://gramathan.blogspot.com
Alexa Rank 1,755,112
22. தமிழ் வெஃப்
http://mytamilweb.blogspot.com
Alexa Rank 1,862,811
23. GNU-கட்டற்ற மென்பொருள் - லினக்ஸ் - தமிழன் வெல்வான்
http://gnutamil.blogspot.com
Alexa Rank 2,169,144
24. Tamilhackx
http://www.tamilhackx.com
Alexa Rank 2,797,040
25. தமிழ் நுட்ப மலர்
http://tamiltechmalar.blogspot.com
Alexa Rank 2,937,210
26. Learn Computer in Tamil - ACS Center - Kahatowita
http://acsstudy.blogspot.com
Alexa Rank 3,074,438
27. உலவு (ulavu blog)
http://ulavublog.blogspot.com
Alexa Rank 3,118,596
28. கற்றது Excel
http://sans-excel.blogspot.com
Alexa Rank 3,395,522
29. நித்தி கிளிக்ஸ்...
http://nithiclicks.blogspot.com
Alexa Rank 3,569,774
30. அனூப்புடன் ஒரு ஐடி வலம்
http://itvalam.blogspot.com
Alexa Rank 4,189,365
31. தமிழ் வலைப்பதிவர் உதவிப்பக்கம்
http://tamilblogging.blogspot.com
Alexa Rank 5,578,967
32. தமிழ் & Cross-Platform Unicode
http://tamilcpu.blogspot.com
Alexa Rank 7,259,640
33. Vijidon
http://vijidon.wordpress.com
Alexa Rank 9,421,039
34. சின்ன பையன்
http://cp-in.blogspot.com
Alexa Rank 11,709,339
35. தமிழில் நுட்பம்
http://tamilit.wordpress.com
Alexa Rank 13,870,809
36. Tamil Blogging Tips
http://tamilbloggingtips.blogspot.com
Alexa Rank 14,319,860

The volcano in southern Iceland's Eyjafjallajokull glacier sends ash into the air just prior to sunset ON Friday, April 16, 2010. Thick drifts of volcanic ash blanketed parts of rural Iceland on Friday as a vast, invisible plume of grit drifted over Europe, emptying the skies of planes and sending hundreds of thousands in search of hotel rooms, train tickets or rental cars. (AP Photo/Brynjar Gauti) #

Sheep farmer Thorkell Eiriksson (R) and his brother-in-law Petur Runottsson work to seal a sheep barn, in case winds shift and ash from a volcano erupting across the valley lands on their farm, in Eyjafjallajokull April 17, 2010. The current season is when the spring lambs are born and such young animals are especially susceptible to volcanic ash in their lungs so they must be stored inside. (REUTERS/Lucas Jackson) #

Ingi Sveinbjoernsso leads his horses on a road covered volcanic ash back to his barn in Yzta-baeli, Iceland on April 18, 2010. They come galloping out of the volcanic storm, hooves muffled in the ash, manes flying. 24 hours earlier he had lost the shaggy Icelandic horses in an ash cloud that turned day into night, blanketing the landscape in sticky gray mud. (HALLDOR KOLBEINS/AFP/Getty Images) #

The ash plume of southwestern Iceland's Eyjafjallajokull volcano streams southwards over the Northern Atlantic Ocean in a satellite photograph made April 17, 2010. The erupting volcano in Iceland sent new tremors on April 19, but the ash plume which has caused air traffic chaos across Europe has dropped to a height of about 2 km (1.2 mi), the Meteorological Office said. (REUTERS/NERC Satellite Receiving Station, Dundee University, Scotland) #

A woman makes a phone call in the empty arrival hall of Prague's Ruzyne Airport after all flights were grounded due to volcanic ash in the skies coming from Iceland April 18, 2010. Air travel across much of Europe was paralyzed for a fourth day on Sunday by a huge cloud of volcanic ash, but Dutch and German test flights carried out without apparent damage seemed to offer hope of respite. (REUTERS/David W Cerny) #

The first of 3 photos by Olivier Vandeginste, taken 10 km east of Hvolsvollur at a distance 25 km from the Eyjafjallajokull craters on April 18th, 2010. Lightning and motion-blurred ash appear in this 15-second exposure. (© Olivier Vandeginste) #

The second of 3 photos by Olivier Vandeginste, taken 25 km from the Eyjafjallajokull craters on April 18th, 2010. The ash plume is lit from within by multiple flashes of lightning in this 168 second exposure. (© Olivier Vandeginste) #

The third of 3 photos by Olivier Vandeginste, taken 10 km east of Hvolsvollur Iceland on April 18th, 2010. Lightning flashes and glowing lava illuminate parts of Eyjafjallajokull's massive ash plume in this 30-second exposure. (© Olivier Vandeginste) #
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)